Monday, December 6, 2010

பாடல் 470: இன்று கிறிஸ்து எழுந்தார்

    Christ the Lord is risen today - 143
                (Tune - 281, 271)

1. இன்று கிறிஸ்து எழுந்தார்
        அல்லேலூயா!
    மாந்தர் தூதர் சொல்கிறார்
       அல்லேலூயா!
    வெற்றி மகிழ் எழுப்பும்
       அல்லேலூயா!
    வான் புவியே பாடிடு
       அல்லேலூயா!

2. மீட்பின் கிரியை தீர்ந்தது
       அல்லேலூயா!
    போரில் வெற்றி சிறந்தார்
       அல்லேலூயா!
    அந்தகாரம் நீங்கிற்று
       அல்லேலூயா!
   சாவின் கூர் ஒடிந்தது
       அல்லேலூயா!

3. முத்திரை காவல் வீணாச்சே
       அல்லேலூயா!
    பாதாளத்தை வென்றாரே
       அல்லேலூயா!
    மரணம் ஜெயிக்கலை
       அல்லேலூயா!
    திறந்தார் பரதீஸை
       அல்லேலூயா!

4. மகிமை ராஜன் வாழ்கிறார்
       அல்லேலூயா!
    சாவே உந்தன் கூரெங்கே?
       அல்லேலூயா!
    நம்மை மீட்க மாண்டாரே
       அல்லேலூயா!
    பாதாளமே ஜெயமெங்கே?
       அல்லேலூயா!

5. கிறிஸ்து விண்ணிற் சென்றாற்போல்
       அல்லேலூயா!
    நாமும் அவர் பின் செல்வோம்
       அல்லேலூயா!
    அவர் போல் எழும்புவோம்
       அல்லேலூயா!
    க்ருசு மோட்சம் நம் பங்கே
       அல்லேலூயா!
                                 Charles Wesley

No comments:

Post a Comment