Thursday, December 9, 2010

பாடல் 461: நண்பரே நாம் ஒன்று கூடுவோம்

    இராகம்: கல்யாணி தாளம்: ரூபகம்

    பல்லவி

    நண்பரே நாம் ஒன்று கூடுவோம்
    பண்புற நாம் நன்று பாடுவோம்
    நண்ணரும் நம் மறை நாதனார்
    மண்ணில் நர உருவானதால்

1. மந்தையில் மேய்ப்பர்கள் தூதனால்
    விந்தையான மொழி கேட்டதால்
    சிந்தை மகிழ்ந்து அந்நேரமே
    கந்தை பொதிந்தோனைக் காணவே -  நண்பரே

2. வெய்யோன் வருமிட வான்மீனோ?
    துய்யோன் தருதுட இசை தானோ?
    மெய்யன் திருமிட ஆற்றலோ?
    அய்யன் பதமிட போற்றலோ? -  நண்பரே

3. கர்த்தத்துவம் நிறை பாலனே!
    கங்குல் பகல் காக்கும் சீலனே!
    எங்கும் உனதொளி வேதனே!
    தங்கும் படியருள் போதனே! -
  நண்பரே

4. அந்தரமானோர் புகழ் தேவே!
    சுந்தரமானோர் மகிழ் கோவே!
    தந்திரப் பாந்தத் தலைமேலே
    வந்தீரோ மிதிக்கக் காலாலே -  நண்பரே
                                                  Y. தேவசுந்தரம்

No comments:

Post a Comment