Saturday, December 11, 2010

பாடல் 453: தேவன் மனிதனாய் ஆகினார்

    Tune: 321 of ESB

    சரணங்கள்

1. தேவன் மனிதனாய் ஆகினார்
    தீயோர் பிணையாய் பூ மேவினார்;
    தேவலோகம் களிகூருதே
    தேவ குமாரனைப் போற்றுதே

    பல்லவி

    போற்றுவோம் போற்றுவோம்
    புண்ணிய நாதன் இயேசுவையே
   
2. காலம் நிறைவேறினபோது
    கன்னி கற்பத்தி லுற்பவித்து;
    தாலம் புரக்கப் பெத்லகேமில்
    இயேசு பிறந்தார் சந்தோஷமே - போற்றுவோம்

3. கூளிச் சிரசை நசுக்கவும்
    கூறிய சாப மளிக்கவும்
    வேதியர் மா மறை ஓதினார்,
    வேதனும் பாலகனாயினார் - போற்றுவோம்

4. மேய்ப்பர்க்கு நற்செய்தி கிட்டுது,
    மேலோக சேனைகள் பாடுது;
    மாட்டிடை மன்னன் துயில்கிறார்
    வானோர் வியந்துற்றுப் பார்க்கிறார் - போற்றுவோம்

5. ஞானிகள் மாளிகை தேடினார்,
    நாதன் ஆவின் குடில் நாடினார்;
    ஆயர் புல்லணை தரிசித்தார்,
    ஆனந்தித்துப் பிரஸ்தாபித்தார் - போற்றுவோம்

No comments:

Post a Comment