Thursday, December 15, 2011

பாடல் 155: நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே


    பல்லவி

    நாடுங்கள் நாடுங்கள் நாடுங்களே - புகழ்
    பாடுங்கள் பாடுங்கள் பாடுங்களே

    அனுபல்லவி

    பாடுறவே பரலோக மதை விட்டு
    பாரினில் மனுவாய் வந்தவரை

    சரணங்கள்

1. நேசமாய்க் காசினி நிந்தை யகற்றிட
    பாச மனுவேலன் பாதமுற்று
    மாசற்றுலகினில் மானிடனாய் வந்த
    இயேசு நாயகனின் நாமமேற்று - நாடுங்கள்

2. பூமிக்கு மேலுள்ள வானத்துக்குமுள்ள
    தூரமாய் பாவம் தூர்த்து விட்டு
    பூதல வாழ்விலே பீடறச் செய்த
    புண்ணியவானான இயேசுவையே - நாடுங்கள்

3. வல்லமை திரித்வ வானவனையே
    சொல்லருங் கிருபைப் பிரதாபனையே
    துல்லிபத்தில் ஞான தீபனையே! பெரும்
    நன்மை யருளும் நம் நாதனையே - நாடுங்கள்
                                                                     K.S. Abraham

No comments:

Post a Comment