Wednesday, December 28, 2011

பாடல் 52: பாவிகளை மீட்க வந்த


    இராகம்: சஹானா தாளம்: ஆதி

    பல்லவி

    பாவிகளை மீட்க வந்த
    பரன் இவர்தாமே

    சரணங்கள்

1. தேவ அன்பைக் கொஞ்சமென்றும்
    தாவித் தேடாமல்
    சிற்றின்ப வலைகளிலே
    சிக்குண்டலையும் - பாவிகளை

2. நேச பிதா அன்பின் சத்தம்
    நீசர் கேட்காமல்
    நான் தானென்ற ஆணவத்தால்
    துன்பத்துள்ளான - பாவிகளை

3. கல்வி, பணம், லோக மேன்மை,
    செல்வமென்றெண்ணி;
    மேசியாவின் தாசர்களை
    வைது திரியும் - பாவிகளை

No comments:

Post a Comment