Friday, December 30, 2011

பாடல் 28: இயேசு நாதர் - கிறிஸ்தேசு நாதர்


    இராகம்: நாதநாமக்கிரியை தாளம்: ஏகம்

    இயேசு நாதர் - கிறிஸ்தேசு நாதர் - உந்தன்
    இரட்சண்ய மூர்த்தி யவரேயாவார்

1. ஆதியிலேதான் வனத்தினின்று - ஏவை
    ஆதஞ் செய்த பாவந் தீர்க்க வென்று - தரை
    மீது கெத்சமனே வனஞ் சென்று - இரத்த
    வேர்வை சிந்தி மிக்க வியாகுலங் கொண்ட - இயேசு

2. ஸ்திரீயின் விழுதலால் ஜெக மக்கள் - உற்ற
    ஜென்ம கன்ம பாவங்கள் போக்க - ஒரு
    ஸ்திரீயின் வித்தாய் இவ்வுலகில் பிறக்க - திருச்
    சித்தங்கொண்ட தேவ குமாரனான - இயேசு

3. விலக்கப்ட்ட மரக்கனி புசித்து - பரன்
    வெறுப்பை யடைந்த யிந்தப் பூவுலகத்து - வந்து
    சிலுவை மரத்தையும் தன் தோளிலெடுத்து - சுமை
    சுமந்து தீர்த்த மத்தியஸ்தனான - இயேசு

4. மண்ணிலிருந்துண்டான முதலாதாம் - செய்த
    மா பாவங்கள் நீக்கி இரண்டாமாதாம் - ஆக
    விண்ணிலிருந்துண்டாகி மெய்ப்போதஞ் செய்து
    மேதினியை மீட்ட சற்குருவாம் - இயேசு
                                                                 K.S. Abraham

No comments:

Post a Comment