Friday, December 30, 2011

பாடல் 29: வாரும் கிறிஸ்துவண்டை நேரே


    இராகம்: குந்தலவராளி தாளம்: ஆதி

    பல்லவி

    வாரும் கிறிஸ்துவண்டை நேரே - பூரணவிசு
    வாசமுண்டால் இரட்சை ஈவாரே

    அனுபல்லவி

    பாரும் கிறிஸ்து பட்ட
    பாட்டின் பலன்கள் கிட்ட

    சரணங்கள்

1. பாவப் பாரங்கள் சுமந்தாரே - கெத்சமனேயின்
    காவில் தேற்ற பலப்பட்டாரே;
    ஆவி மிக வருந்த ஆச்சே வேர்வை இரத்தமாய்! - வாரும்

2. தேவ தூஷணங்களைச் சாற்ற - நிர்மலனும்
    தேவ நீதியை நிறைவேற்ற
    கோவே முண்முடி சிரங்கொண்டா ரடிகளுரம்! - வாரும்

3. பாரக் குருசு ஏற்றினாரே - கால் கரங்களில்
    சேர ஆணி கடாவினாரே;
    நேரே விலாவில் குத்துண்டாரே நரர் பிழைக்க! - வாரும்

4. துங்கன் மேனியலைந்து காயம் - பாவிகளுக்கு
    அங்கே அடைக்கல சகாயம்;
    நொந்து சிலுவையடி பொங்கு முதிரந்தேடி! - வாரும்

5. எல்லாம் முடிந்த தென்று ஆவிவிட்ட மூன்றாம் நாள்
    வல்லானுயிர்த்துப் பரமேகி
    நல்லான் பரிந்து பேசி நாடித்தேடுறா ரும்மை - வாரும்

No comments:

Post a Comment