Wednesday, December 28, 2011

பாடல் 49: தாமதமேன் பாவியின்னும்


    சரணங்கள்

1. தாமதமேன் பாவியின்னும்
    சா மதித்துனை விடுமோ?
    சற்குருவின் பாதந் தேடி,
    துர்க்குணங்கள் மாற்று நாடி

2. ஆவலாய் நிற்கின்றாரே
    பாவியுன்னை மீட்கவென்று;
    ஜீவமோசம் ஆகின்றாயே,
    தாவியவர் மீட்பைத் தேடு

3. இன்று மரித்தெங்கே போவேன்
    என்றுணர்ந்து இப்போதே வா;
    இன்னும் ஓர் தருணமில்லை
    இன்றைக்கே மனந்திரும்புவேன்

4. பாவங்களைக் கொண்டு இப்போ
    பாவி வாறேன் என்று சொல்லு
    ஜீவனுள்ள தேவன் அவர்
    செய்வதையே வந்து பாரேன்

5. முடிவுக்குக் காலமாச்சே
    மோசம் போகாதே பாவி;
    கடவுள் உனக்களித்த
    காலம் போதும், இரட்சையடை

No comments:

Post a Comment