Wednesday, December 28, 2011

பாடல் 51: வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா


    இராகம்: கமாஸ் தாளம்: சாப்பு

    பல்லவி

    வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா பாவி!

    சரணங்கள்

1. பாவி! நீ இன்னும் பயமின்றிப் பாவத்தில்
    நிலைத்திருக்காதே; இப்போ
    தாவியே இரட்சகருன்னை அழைக்கிறார்;
    தாமதஞ் செய்யாதே - வா பாவி

2. பாவநாசர் உனக்கென்று சிந்தின
    இரத்தம் அதோ பாராய்! - மனஸ்
    தாபத்தோடேசுவின் பாதத்தில் சேர
    இக்ஷணமே வாராய் - வா பாவி

3. ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந் தப்பத்
    தீவிரமா யோடிவா - உன்
    பாவத்தின் சாபத்தை நீக்கும் தேவ ஆட்டுக்
    குட்டியின் அண்டைக்கு வா - வா பாவி

4. காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் இனி
    எப்போ குணப்படுவாய் நீ?
    ஜாலம் பண்ணி தேவ சாபம் அடையாமல்
    இப்போ இரட்சிப்படைவாய்! - வா பாவி

No comments:

Post a Comment