Wednesday, December 28, 2011

பாடல் 47: இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண


    பல்லவி

    இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா
    பக்ஷமுடனே இரட்சகரண்டை ஓடி வா

    சரணங்கள்

1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுது
    ஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா - இரட்சிப்பின்

2. உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார்
    அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா - இரட்சிப்பின்

3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார்
    நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா - இரட்சிப்பின்

4. ஆசீர்வாதத்தைக் கூறி அன்புடனே அழைக்கிறார்
    நேசமுடனே இரட்சகரண்டை ஓடி வா - இரட்சிப்பின்

5. பாவி உன்னை ஈடேற்றப் பரலோகம் விட்டாரே;
    தாவியே நீ அவர் பாதந்தேடி ஓடி வா - இரட்சிப்பின்

No comments:

Post a Comment