Monday, December 26, 2011

பாடல் 89: மேக மீதில் இயேசு ராஜன்


    பல்லவி

    மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே!
   
    அனுபல்லவி

    ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாறாரே!

    சரணங்கள்1

1. ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே!
     மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் - மேகமீதில்

2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார்
    மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே - மேகமீதில்

3. பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமே
    கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே  கொடுத்திடுவார் - மேகமீதில்

4. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே!
    அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார் -
மேகமீதில்

5. ஆயிர வருஷ ஆளுகை செய்வார் ஆண்டவர் இயேசுதாமே!
    நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும் ஜோதியின் ஆளுகையில் -
மேகமீதில்

6. அல்லேலூயா கீதம் பாடி அகமகிழ்ந்திடுவோமே
    வல்லவர் வரும் வேளையுமிதோ மெல்லவே நெருங்கிடுதே - மேகமீதில்

No comments:

Post a Comment