Tuesday, December 27, 2011

பாடல் 75: ஒரே பிராண நாதர்தான் உண்டு


    இராகம்: ஆனந்த பைரவி தாளம்: ஆதி

    பல்லவி

    ஒரே பிராண நாதர்தான் உண்டு!
    பூலோகத் தாரே

    சரணங்கள்

1. இந்தப் பிராணநாதர் நம்பும்
    இரட்சண்யத்துக் கிவரே ஸ்தம்பம்!
    மற்றும் வேறே நாமங்களால்
    சற்றும் சுகப்பட்டீர்களோ? - ஒரே

2. பாவிகள் ஈடேறி மோட்ச
    பாக்கியம் பெறுவதற்காய்
    ஜீவன் விட்டுயிர்த் தெழுந்து
    விண்ணுலகுக் கேறிச் சென்ற! - ஒரே

3. பற்பலர் பலவிதமாய்
    கற்பிக்கும் பிரமாணங்களை
    கேட்டுக்கேட்டு நெஞ்சு நொந்து
    கேடற வகை பார்ப்போரே - ஒரே

4. என்னைப் பாவச் சேற்றினின்று
    அன்பதாகக் கரை தூக்கி
    துன்பம் தாங்க அருள் தரும்
    நண்பனான நாயனிவர்! - ஒரே

5. இத்தனை நாளாக வீணாய்
    தத்திக் குத்தித் தடுமாறி
    சத்திய நெறியை விட்டு
    புத்தியில் மயங்கினோரே! - ஒரே

6. தாமதித்து நீ நில்லாதே
    சா மதித்துனை விடுமோ?
    பாவத்தை யுணர்ந்து இயேசு
    பாதத்தை இப்போதே தேடு! -ரே

No comments:

Post a Comment