Wednesday, December 28, 2011

பாடல் 40: அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்


    பல்லவி

    அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்;
    மீட்கப்பட்டேன் நான் இரட்சிக்கப்பட்டேன்

    அனுபல்லவி

    சற்றாகிலும் கிருபை பெற
    முற்று மபாத்திரனான போதும்

    சரணங்கள்

1. உலகத்தின் சிற்றின்பப் பாசங்களும்
    பலவித மாமிச சிந்தைகளும்
    பாவி என்னிதயத்தை வதைத்தபோது
    பாவ விமோசனார் கிருபை கூர்ந்தார் - அற்புதம்

2. மாய்மால ஜீவியம் செய்துகொண்டு
    வாய்ப்பேச்சினால் மட்டும் பூசை செய்தேன்;
    நீண்ட ஜெபங்களைச் செய்வதினால்
    மீண்டு மோக்ஷம் போகக் காத்திருந்தேன் - அற்புதம்

3. சன்மார்க்க வேஷத்தைத் தரித்துக்கொண்டு
    துன்மார்க்கப் பாதையில் தாம் நடந்து
    வேதப் புரட்டாய்த் திரிந்தவரின்
    ஓதுதல் கேட்டு நான் கெட்டலைந்தேன் - அற்புதம்

4. நான் செய்த தீவினையுணர்ந்து எந்தன்
    வான பிதாவண்டை ஓடி வந்து
    மெய் மனஸ்தாப அழுகையுடன்
    ஐயனே! இரட்சியும் என்றவுடன் - அற்புதம்

5. இந்த மா இரட்சையை நம்பாயோ நீ?
    வந்து பார் மீட்பரின் சிலுவையண்டை!
    ஓடுகின்ற இந்த சிவந்த நதி
    தேடி வருவோர்க்கு உயிரைத் தரும் - அற்புதம்

No comments:

Post a Comment