Friday, December 30, 2011

பாடல் 7: ஐயையோ நான் என்ன செய்வேன்


    இராகம்நவ்ரோஜி தாளம்ஆதி
    மெட்டு: பாதகனாய் நானலைந்தேன் 

    பல்லவி

    ஐயையோ நான் என்ன செய்வேன்  
    அங்கம் பதைத்தேங்குதையா

    அனுபல்லவி

    மெய்யாய் எந்தன் பாவத்தாலே
    மேசியா வதைக்குள்ளானார்

    சரணங்கள்

1. முண்முடி சிரசில் வைத்து
        மூங்கில் தடியாலடித்த
    சண்டாளர் செய்கையை எண்ண
        சகிக்குதில்லை எந்தனுள்ளம் - ஐயையோ

2. பெற்ற தாயார் அலறி வீழ
        பிரிய சீஷர் பதறி ஓட
    செற்றலர் திரண்டு சூழ
        தேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? - ஐயையோ

3. கால் தளர்ந்து போச்சுதையா
        கைகள் சோர்ந்து வீழுதையா
    சேல்விழிகள் மங்குதையா
        தேவே எந்தன் பாவமல்லோ - ஐயையோ

4. நா வறண்டு நடை தள்ளாட
        நண்பர் கண்டு கதறி வாட
    ஜீவ இம்சையே மேலாட
        தேவே கொல்கதாவில் நீட - ஐயையோ

5. சிலுவை தன்னைப் பாட்டிலிட்டு
        தேவே உம்மை மேல் கிடத்தி
    வலுவாய் கை கால்களை இழுத்து
        மாட்டினாரோ ஆணியிட்டு - ஐயையோ  

6. துடிக்குதே உன் அங்கமெல்லாம்
        சோர்வடைய உந்தனாவி
    வெடிக்குதுந்தன் இடது விலா,
        விரனீட்டியாலே குத்த - ஐயையோ 

7. இந்தக் கஷ்டம் நீர் சகிக்க
        வந்ததெந்தன் பாவமல்லால்
    உந்தன் குற்றம் யாதுமில்லை
        எந்தையே நீரே என் தஞ்சம் - ஐயையோ

No comments:

Post a Comment