Friday, December 30, 2011

பாடல் 22: சிலுவையிலறையுண்ட மானிடர்


    Behold the Saviour of mankind
              (Tune 85 of ESB)

1. சிலுவையிலறையுண்ட
    மானிடர் மீட்பர் பார்!
    இரத்தம் சிந்தி உனக்காய் மாண்ட
    அன்பின் பெருக்கத்தைப் பார்!

2. கேளேன்! அவர் துயர் குரல்
    பூமி நடுங்குதே;
    தேவாலய திரைச்சீலை
    கிழிந்து போகுதே!

3. என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்
    முடிந்த தென்கிறார்
    திருச் சிரசது சாய்த்து
    மடிகிறாரே பார்!

4. சாவின் சங்கிலி முறித்து
    பிரகாசிப்பாரவர்
    ஒப்பற்றதல்லோ உம் அன்பு
    தேவாட்டுக் குட்டியே!
                                 Samuel Wesley. Sr

No comments:

Post a Comment