Thursday, December 29, 2011

பாடல் 34: ஆவலாய் மீட்பரண்டை வா


    இராகம்: காப்பி தாளம்: ஆதி

    பல்லவி

    ஆவலாய் மீட்பரண்டை வா - நீ வா - நீ வா

    சரணங்கள்

1. இரட்சகர் தானமதாம் - இரட்சை நீ சொந்தமாக்க
    விரைவுடன் இயேசு பாதம் வா - நீ வா - நீ வா! - ஆவலாய்

2. எத்தனை நாளாக நீ எத்தனை இகழுவாய்?
    கர்த்தர் அழைக்கும் சத்தம் கேள் - நீ கேள் - நீ கேள் -
ஆவலாய்

3. பாவத்தாலழுந்தும் உன் பாவம் நீக்குவேன் என்ற
    காவலன் பாதத்தை நீ சேர் - நீ சேர் - நீ சேர் - ஆவலாய்

4. லோகம், ஜடம், பிசாசும் ஆகுலமியற்றினும்
    சோகமற நல்லாயனைப் பார் - நீ பார் - நீ பார் - ஆவலாய்

5. உன்னைத் தானே வெறுத்து உன் சிலுவை எடுத்து
    உன்னதனருள் நம்பி வா - நீ வா - நீ வா - ஆவலாய்

6. பாவமன்னிப்புச் சமாதானமும் பரிசுத்தமும்
    தேவனுறை மோக்ஷமும் நினை - நினை -  நினை - ஆவலாய்

7. மனஸ்தாபம் விசுவாசம் தள்ளுதலாம் மூன்றும்
    மனுஷர் இரட்சைக்கு வழி காண் - நீ காண் - நீ காண்! - ஆவலாய்

No comments:

Post a Comment