Friday, December 30, 2011

பாடல் 3: கல்வாரி சிலுவையில்


    On the Cross of Calvary – 128
              (Tune 173 of ESB) 

1. கல்வாரி சிலுவையில்
    தொங்கி ஜீவனை விட்டார்
    மானிடரிதயத்தில்
    நன்மாறுதல் செய்திட
    மாசற்ற ஜீவ நதி
    பாவம் போக்கத் திறந்தீர்
    எனக்காக மரித்தீர்
    கல்வாரி சிலுவையில்

    பல்லவி

    அக்கல்வாரி! அக்கல்வாரி!
    எனக்கேசு மரித்தார்
    கல்வாரி சிலுவையில்

2. இவ் வற்புத அன்புதான்
    மீட்பருக்கு எந்தனை
    முழு தத்தஞ் செய்யத்தான்
    ஆவி ஆத்துமா தேகத்தை
    சர்வாங்க பலியாக
    இயேசுவே படைக்கிறேன்
    எனக்காக மரித்தீர்
    கல்வாரி சிலுவையில் - அக்கல்வாரி

3. நானுமக்குச் சொந்தமே
    என்னை ஏற்றுக்கொள்ளுமேன்
    நேச மீட்பர் தயவாய்
    என்னில் வாசம் பண்ணுமேன்
    பாவம் போக்கி என் நெஞ்சை
    சுத்தமாக்கி விடுமேன்
    எனக்காக மரித்தீர்
    கல்வாரி சிலுவையில் - அக்கல்வாரி

4. கர்த்தர் மாண்ட நாளதில்
    பூலோகம் அதிர்ந்தது
    இந்த மா பலியால் தான்
    கேளும் இரட்சை வந்தது
    நம்பும் எந்தப் பாவிக்கும்
    என்றும் நல் விடுதலை
    வந்திடவே மரித்தார்
    கல்வாரி சிலுவையில் - அக்கல்வாரி
                                          Sarah Graham

No comments:

Post a Comment