Wednesday, December 28, 2011

பாடல் 41: உலகம் உன் சதமென்று எண்ணியிராதே


    இராகம்: இந்துஸ்தானி தாளம்: மிஸ்ர ஏகம்

    பல்லவி

    உலகம் உன் சதமென்று எண்ணியிராதே!
    பலவித பாவத்தின் வலையிற் சிக்காதே

    சரணங்கள்

1. மாதா பிதா மற்றும் செல்வமிருந்தாலும்
    மரணம் வந்து உந்தன் வாழ்வைக் குலைக்கும் - உலகம்

2. சாவின் கோரக்காட்சி நெருங்கையில்
    பாவி நானென் செய்வேனென்று திகைப்பாய் - உலகம்

3. நரகத்தின் புழுக்களும் நெருப்பு மட்டுமல்ல
    பரலோகக் கீதங்களுன்னை வதைக்கும் - உலகம்

4. பாவ விமோசனம் இப்போதே பெறுவாய்
    தாவியுன் மீட்பரின் பாதத்தைத் தேடு - உலகம்

No comments:

Post a Comment