Friday, December 30, 2011

பாடல் 32: ஆயத்தமாயிருங்கள் எதிர்போக


    இராகம்: கௌசிகை தாளம்: ஆதி

    பல்லவி

    ஆயத்தமாயிருங்கள் எதிர்போக - அறி
    யாத நேரம் வருவார் மணவாளன்

    சரணங்கள்

1. மாய பாச வினைகள் மாய்த்துவிட்டு - மனம்
    மாறி நல் அகச்சுத்தம் மருவிக்கொண்டு - ஆயத்தமாயிருங்கள்

2. இயேசுவை நண்பனாய் ஏற்றுக்கொண்டு - அவர்
    ஈயும் மெய்ச் சமாதானம் பெற்றுக்கொண்டு - ஆயத்தமாயிருங்கள்

3. சத்திய வேத போதனையில் - நடந்து
    உத்தமராய்த் தேவபக்தராய் - ஆயத்தமாயிருங்கள்

4. ஜீவ கனி புசித்து திருப்தி கொள்ள - நித்ய
    ஜீவ தண்ணீர் குடித்து சுகித்திருக்க - ஆயத்தமாயிருங்கள்

5. நித்திய ஆனந்த பாக்கியங்கள் - நல்ல
    நேய மணவாளனோடனுபவிக்க - ஆயத்தமாயிருங்கள்

No comments:

Post a Comment