Wednesday, December 28, 2011

பாடல் 60: உலகில் பாவப் பாரத்தால் சோரும்


    இராகம்: சயிந்தவி தாளம்: ஆதி
          (தருணமே பரமசரீரீ என்ற மெட்டு)

    பல்லவி

    உலகில் பாவப் பாரத்தால் சோரும் - இளைப்
    பார்ந்த நரரே வந்து சேரும்

    அனுபல்லவி

    அலைசடி பட்டவரே வாரும் - எந்தன்
    ஆறுதலால் அவற்றை தீரும் - பொல்லா

    சரணங்கள்

1. பாவி என்றெண்ணி திகைப்போரும் - எந்தன்
    பாவம் தீராதென்றிப்போரும்
    ஆவலாய் ஓடிவந்து சேரும் - நான்
    ஆகாமியர்க்காக வந்ததோரும் - பொல்லா - உலகில்

2. இளமை என்றே எண்ணி நில்லாதே - சாவும்
    இளமை என்று சொல்லிச் செல்லாதே;
    வளமாய் வருவதைத் தள்ளாதே - கெட்ட
    வழக்கமதையே கைகொள்ளாதே - பொல்லா - உலகில்

3. வாலிபப் பிராயமிதில் நாளும் - இன்ப
    வாழ்வு சுகிக்கவென்று மாளும்;
    சீலரே, இன்றென்னுரை கேளும், அவை
    சேர்க்கும் நரகத்தில் எந்நாளும் - பொல்லா - உலகில்

4. காலம் கடந்த கிழவோரே - வீணாய்க்
    காலம் கழித்தே உழல்வோரே,
    காலமே தேட மறந்தோரே - உங்கள்
    கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே – பொல்லா - உலகில்

No comments:

Post a Comment