Wednesday, December 28, 2011

பாடல் 38: மீட்படை தாமதம் செய்யாதே


    பல்லவி

    மீட்படை தாமதம் செய்யாதே
    மீட்படை இன்றே!
    சரணங்கள்

1. மீட்பர் உன்னை இன்று ஆவலாய்த் தேடுகிறார்!
   மாட்டேனென்று சொல்லிப் போய்விடாதே -
மீட்படை

2. பாதகங்கள் மிக்க மிக்கவே செய்த நான்
    நாதரேசு பாதம் சென்றேன்; மீட்டார் - மீட்படை

3. பாவி பாவி பாவி என்றுனை எண்ணினால்;
    ஆவல் கொண்டு தாவித்தேடு, மீட்பார் - மீட்படை

4. நாளைக் காகட்டென்று எண்ணி நீ தள்ளிடாய்;
    நாளை என்பதுந்தன் நாளோ? வா! வா! - மீட்படை

5. வந்தால் மீட்பருன்னை அன்புடன் தாங்குவார்
    இந்த நல்ல ஈவைத் தேடு இன்றே - மீட்படை

No comments:

Post a Comment