Wednesday, December 28, 2011

பாடல் 50: தேவாதி தேவன் மனுவானாரே


    பல்லவி

    தேவாதி தேவன் மனுவானாரே - உன்னத

    சரணங்கள்

1. பரலோகச் செல்வத்தை
    பார்த்திபன் வெறுத்து
    நரரூபமானாரே
    பாவி உன்னை மீட்க! - தேவாதி

2. திருமறை வாக்குகள்
    பரன் நிறைவேற்றிட
    சிறுமையாய் உதித்த
    கிருபைச் சுதனான - தேவாதி

3. மன்னுயிர்க்காகத்
    தன்னுயிரைத்தர
    தானாக நேசத்தால்
    வானாசனம் ஆகிவிட்ட - தேவாதி

4. தேவ துரோகிகள்
    வேதனையை நீக்கி
    பேதைகள் கோபிகள்
    வேதத்தைக் கைக்கொள்ள - தேவாதி

5. மார்க்க வைராக்கியரே
    மூர்க்க வெறியரே
    பார்த்திபன் நேசத்தை
    பார்த்தால் திகைப்பீரே - தேவாதி

6. இந்த நல்வேளையில்
    வந்துனை மீட்பர்க்கு
    தந்தால் உன்னை இவர்
    சொந்தமாய் ஏற்பார் காண் - தேவாதி

No comments:

Post a Comment