Thursday, December 29, 2011

பாடல் 35: வா வா பாவி! நீ வந்து மனம் மாறு

    இராகம்: கமாஸ் தாளம்: அடதாளசாப்பு

    பல்லவி

    வா வா பாவி! நீ வந்து மனம் மாறு!
    வந்து மனம் மாற தேவ மைந்தனையே நாடு!

    சரணங்கள்

1. பாவத்தால் ஐயோ பரமனை விட்டாயே!
    சாபத்தைக்கொண்டாயே தயங்கி நிற்கின்றாயே - வா

2. நித்தம் நீ செய் பாவங்கள் எத்தனை அகோரம்
    அத்தனையும் போக்க கர்த்தன் சுத்த பரிகாரம் - வா

3. பூரண நேசம் பொருந்தும் விசுவாசம்,
    ஆரணப் பிரகாசம் அருள்வார் நித்ய வாசம் - வா

No comments:

Post a Comment