Wednesday, December 28, 2011

பாடல் 55: யாரவர் பாரேன்


    பல்லவி

    யாரவர் பாரேன்?
    யாரவர் கேளேன்!
    பாரேன்! பாவி உன்
    ஆத்துமக் கதவைத்
    தட்டும் நாயகனை

    சரணங்கள்

1. இந்த நல் உணர்வு
    வந்ததோ இதன்முன்?
    தந்தால் இப்போ உன்
    ஆத்துமத்தைச் சுத்தம்
    செய்வேன் என்கிறார் கேள் - யாரவர்

2. பாவியே உந்தன்
    பாவங்கள் போக்க
    விண்ணை விட்டு
    நீதி நிறைவேற்றிட
    மண்ணில் ஆனவரை! - யாரவர்

3. ஐந்து காயத்தினால்
    அருள் நதியாக
    பாய்ந்து வடியும்
    மா அன்பின் இரத்தத்தால்
    தோய்ந்து நிற்கிறார் பார்! - யாரவர்

4. நேசர் கண்ணீரை
    பாசமாய் சொரிந்து
    பேசுகிறார் இன்னும்
    சாந்தமாய் நின்று, உன்
    மாசு தீர்க்க வென்றே! - யாரவர்

No comments:

Post a Comment