Friday, December 30, 2011

பாடல் 31: விண்டார் கிறிஸ்தேசு


      இராகம்: தெம்மாங்கு தாளம்: திஸ்ரஏகம்
            (கெட்ட குமாரன் உவமை)
      மெட்டு: நித்திய மோட்சானந்த

      கண்ணிகள்

  1. விண்டார் கிறிஸ்தேசு - குணப்பட
      வென்றே ஒரு உவமை
      உண்டு ஒருவனுக்குப் - புதல்வர்
      இரண்டவரிலிளைஞன்

  2. தந்தையே எந்தனுக்குத் தனத்தினில்
      வந்திடும் பங்கதனை
      தந்திடுமென்று கேட்டுத் - தவறாமல்
      தன் வீதம் வாங்கிக்கொண்டான்

  3. சென்றானயல் தேசம் - துன்மார்க்கங்கள்
      செய்தான் பல தோஷம்;
      தின்றா னெலாம் நாசம் - வறிஞனாய்த்
      தீர்ந்தான் வெகு மோசம்

  4. பஞ்சத்தினால் மெலிந்து - வயிற்றுப்
      பசியினால் வருந்தி
      பஞ்சம் பிழைக்கவென்று - ஒருவனைத்
      தஞ்சமென்று சார்ந்தான்

  5. பன்றிகளை மேய்த்தான் - தவிட்டினால்
      பசியாற நினைத்தான்;
      பன்றிக்கிடுந்தவிடும் - கிடையாமல்
      பட்டினியாய்க் கிடந்தான்

  6. புத்தி மிகத் தெளிந்து - புலம்பினான்
      மெத்தப் பசி ஐயையோ!
      எத்தனை பேர்க்குணவோ - பூர்த்தியாய்
      என் பிதா வீட்டிலுண்டு!

  7. எழுந்து இப்பொழுதே - ஏகுவேன்
      என் பிதாவின் சமுகம்
      விழுந்து நான் தொழுதே - குற்றத்தை
      விள்ளுவே னென்றுரைத்தான்

  8. தந்தையை வந்து கண்டான் - தரை மட்டும்
      தாழ்ந்து தொழுதழுதான்
      எந்தையே உந்தனுக்கும் - பரத்துக்கும்
      ஏற்காத தோஷி என்றான்

  9. மைந்தன் மறுகுவதும் - அவன் ரூபம்
      மாறி யிருப்பதுவும்
      கந்தை யணிந்ததுவும் - கண்டு பிதா
      நொந்து மனம் மெலிந்தான்

10. சுத்திகரித்தெடுத்து - உயர்ந்த
      சுத்த ஆடை தரித்து
      மெத்த விருந்தளித்து - சந்தோஷ
      நித்தப்பவுசளித்தான்

11. இந்த இளைஞனைப்போல் - குணப்படா
      தெந்தெந்தப் பாவிகளும்
      வந்து அறிக்கை செய்தால் - இயேசு பாவம்
      மன்னித்தாசி அளிப்பார்

No comments:

Post a Comment