Monday, December 26, 2011

பாடல் 84: பாவியே சாவுக்குத் தீவிரித்து


    'வானபிதா தந்த வேதத்திலே' என்ற மெட்டு
                  (Tune 473 of ESB)

1. பாவியே சாவுக்குத் தீவிரித்து
    தூய இரட்சகரின் வேண்டுதலை
    தீய மனதுடன் தள்ளி, நீயும்
    தூரம் போகாதே கிருபை விட்டு!

    பல்லவி

    வந்திடு இயேசு மந்தையில் நீ
    தந்திடுவாய் சிந்தைதனை;
    இங்கிதம் பாட பாவியே நீ
    வந்திடு இயேசுவிடம்

2. அன்பா யழைத்தார் பல தடவை
    இன்னும் நின்றாத்துமம் தட்டுகிறார்!
    உன்னோடு வாழ இடங்கொடென்ற
    முன்னவன் வேண்டுதல் தட்டிடாது - வந்திடு

3. பேரொளி மன்னிப்பின் நாட் செல்லுதே
    சேரும் விண் வாசலடைகின்றதே!
    தாரணி விட்டுதான் நீங்கிடுவாய்
    சார்ந்திடு இயேசுவின் பாதத்தில் நீ! - வந்திடு

No comments:

Post a Comment