Monday, December 26, 2011

பாடல் 88: தேவன் வரும் நாளதிலே


    இராகம்: தெம்மாங்கு தாளம்: திரிசாப்பு

1. தேவன் வரும் நாளதிலே - என் நண்பா
    பூமியிலுள்ள மனுஷரெல்லாம்
    ஏகமாகக் கூடுவார்கள் - என் நண்பா
    இயேசு முன்னே சேருவார்கள்

2. புத்திகெட்ட மானிடர்கள் - கத்திக் கத்தி அலறுவார்கள்
    சுத்தமுள்ள மானிடர்கள் - என் நண்பா
    கர்த்தனேசைச் சேர்ந்திடுவார்

3. தூஷணங்கள் பேசினோரை - மாசணுகா நாளதிலே
    மோசமுள்ள தீ நரகில் - என் நண்பா
    நாசமாகத் தள்ளிடுவார்!

4. மறுதலித்த பேர்களெல்லாம் - பரிதபிப்பார் தீ நரகில்
    நெறி தவறிப் போகாமலே - என் நண்பா!
    சரிவரவே வேதங் கேளாய்!

5. தீயகுணப் பாதகரும் - மாயகுணப் பேதைகளும்
    பேயினுட தூதர்களும் - என் நண்பா!
    போயழிவார் தீ நரகில்!

6. அண்டபரனை மறந்து கண்டதெல்லாம் தெய்வமென்று
    தெண்டனிட்ட பாவியெல்லாம்  - என் நண்பா!
    சென்றழுவார் தீ நரகில்

7. ஓடுவார்க ளங்குமிங்கும் - சாடுவார்கள் தாகத்தாலே
    தேடுவார்கள் தண்ணீரையே - என் நண்பா!
    வாடுவார்கள் கிட்டாமலே!

8. தள்ளை தந்தை யானவர்கள் - பிள்ளைகளைப் பார்த்தழுவார்
    துள்ளித் துள்ளிப் பார்த்தழுவார் - என் நண்பா!
    எள்ளளவு மோயமாட்டார்!

9. ஐயையோ, சொல்வதெல்லாம் பொய்யல்லோ வென்றிருந்தோம்
    தீயல்லோ பிடித்ததென்பார் - என் நண்பா!
    பேயல்லோ கெடுத்ததென்பார்!

No comments:

Post a Comment