Wednesday, December 28, 2011

பாடல் 45: இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்


    பல்லவி

    இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்
    ஏற்ற நல் நாள், ஏற்ற நல் நாள்

    அனுபல்லவி

    சொன்னார் கிறிஸ்துனக்குக்
    கிருபையைச் சொரிந்து

    சரணங்கள்

1. வாடித் திகைத்துப் புலம்பாதே - உந்தன்
    மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே - இந்நாள்

2. இனிமேலாகட்டு மென்றெண்ணாதே - பாவ
    இனிமை மேற்கொண்டுய்ய உன்னால் ஒண்ணாதே - இந்நாள்

3. பாடுபட்ட கிறிஸ்தைப்பாரு - உந்தன்
    பாவங்கள் நீங்க அவ ருதிரத்தைச் சேரு - இந்நாள்

4. உலக சிநேகம் வெகுக் கேடு - அதில்
    உடந்தைப்படாமல் ஜீவ மார்க்கத்தைத் தேடு - இந்நாள்

5. இதுவே தகுதியான காலம் - இதை
    இழந்து விடாமல் பற்றிக் கொண்டாலனுகூலம் - இந்நாள்

No comments:

Post a Comment