Friday, December 30, 2011

பாடல் 27: திரும்பு திரும்பு ஏன் சாக வேண்டும்


        (சோதனைக் கிணங்கல்)
    Oh turn ye, Oh turn ye - 170
              (Tune 579 of ESB)

1. திரும்பு திரும்பு ஏன் சாக வேண்டும்?
    கர்த்தர் இரக்கத்தால் சமீபிக்கிறார்
    வா என்கிறார் இயேசுவும் சுத்தாவியும்
    மோட்சத்திற் கழைக்கத் தூதர் நிற்கிறார்

2. உனது இருதயம் சீர் அடையுமா?
    நீ காலதாமதஞ் செய்து நிற்பதால்
    நிர்ப்பந்தமான பாவியாயினும் வா
    இரட்சண்ய ஊற்று இங்கே ஓடுவதால்

3. ஏதுக்குப் பூலோகச் செல்வம் சிற்றின்பம்?
    இவை உன் துன்பம், நோயும், நீக்குமோ சொல்
    சாகும் வேளையில் போய் விடுமோ பயம்?
    மோட்ச வீட்டுக்கு உன்னைச் சேர்க்குமோ சொல்

4. பசியால் வருந்தி நிற்பதெதுக்கு?
    இயேசுவின் அன்புதான் உனக்குத் தேவை
    நீ இன்னம் சந்தேகிப்பது ஏதுக்கு?
    ஆராய்ந்து பார் நீ மட்டற்ற கிருபையை
                                              Josiah Hopkins

No comments:

Post a Comment