Friday, December 30, 2011

பாடல் 8: கல்வாரிக்குப் போகலாம் வாரும்


    இராகம்: மோகனம் தாளம்: ஆதி

    பல்லவி

    கல்வாரிக்குப் போகலாம் வாரும்; எம்
        காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட

    சரணங்கள்

1. பொல்லாப் பகைஞர் கூட்டம்
        எல்லாம் திரண்டு அங்கே
    நல்லாயன் மீட்பர்தனைக்
        கொல்லும் அவஸ்தை காண - கல்வாரிக்கு

2. சிவப்பங்கி தரித்தோராய்
        சிரசில் முண்முடி சூண்டு,
    தவத்தி லுயர்ந்த நாதன்
        தவிக்கும் முகத்தைப் பார்க்க - கல்வாரிக்கு

3. ஐயோ பிதாவே என்னை
        ஏன் கைவிட்டீர் என்றழும்
    துய்யன் துயர சத்தம்
       தொனிக்கிற தங்கே இன்னம் - கல்வாரிக்கு

4. நாவு வறண்டதினால்
        தாகங்கொண்டேன் என்றாராம்
    பாவிகள் காடிதனைக்
        கூடிக் கொடுத்தனராம் - கல்வாரிக்கு

No comments:

Post a Comment