Friday, December 30, 2011

பாடல் 23: ஆ! கல்வாரி மலை


    On a hill far away - 124

1. ஆ! கல்வாரி மலை நின்றதோர் சிலுவை
    மகா நோவு நிந்தைச் சின்னம் பார்!
    அதை நேசிக்கிறேன், அங்கென் நேசர் லோகை
    மீட்க நீசர்க்காய் தியாகமானார்

    பல்லவி

    ஓ பாராட்டுவேன் பூர்வக் குருசை
    ஜெய சின்னம் படைக்கு மட்டும்!
    பற்றிக் கொள்வேன் அவ் விருப்பக் குருசை
    மாற்றி விண்கிரீடம் பெறுமட்டும்!

2. ஓ அப்பூர்வக்குருசு லோகத்தார் நிந்தித்தும்
    என்னைக் கவர்ந்த தாச்சர்யமே;
    தேவ ஆட்டுக்குட்டி விண்ணின் மேன்மை விட்டும்
    அதைக் கல்வாரி சுமந்தாரே - ஓ பாராட்டுவேன்

3. அந்தக் கேடாமெனும் அந்தக் குருசின்
    அதை பக்தியாய் சகிப்பேன்
    அவரோர் நாழிகை அழைப்பார் மாளிகை
    அங்கென் மகிமைப் பங்கடைவேன் - ஓ பாராட்டுவேன்
                                                                        George Bennard

No comments:

Post a Comment