Friday, December 30, 2011

பாடல் 1: அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே


    The Founder's Song - ஸ்தாபகரின் பாட்டு - 298
                         (Tune 340 of ESB)
                   O! Boundless Salvation!

1. அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே!
    இயேசுவால் வந்த பூரண தயவே!
    உலகமெல்லாம் மீட்கும் பாக்கியத்திரள்!
    யாவர்க்காயும் பாயும்; நீ என் மேல் புரள்

2. பாவங்கள் ஏராளம், கறை நிறைந்தேன்
    மனங்கசந்து நான் கண்ணீர் சொரிந்தேன்
    அழுகை வீணாம்! ரத்தாம்பரக்கடல்!
    அலை சுத்திசெய்யும்; வா என் மேல் புரள்

3. ஆசைகள் அகோரம், கோபம் கொடூரம்
    உள்ளத்தை ஆளுது தீமையின் உரம்;
    உன் அலைகளின் கீழ், ஓ! பெருங்கடல்!
    மீட்புத்தோன்றுதிதோ; வா, என்மேல் புரள்

4. சோதனைகள் மோத, பயங்கள் சூழ
    பாழாச்சுதென் ஜீவன் சுகங்கள் மாள
    மெய்யாய் இனிச் சுகம்! சுத்த நீர்க்கடல்!
    என்னை சுத்திசெய்வாய்; வா, என் மேல் புரள்

5. தயா சாகரமே! வாஞ்சையாய் நின்றேன்
    ஜீவிக்கும் ஆச்சர்ய அலை ஓரம் நான்,
    திரும்ப வந்தேன் கறை போக்குங் கடல்!
    உன்னை விட்டுப் போகேன்; வா, என்மேல் புரள்

6. புரண்டுவரும் அலைகளைத் தொட்டேன்
    மீட்க வல்லோன் என்னும் இரைச்சல் கேட்டேன்
    மீட்படைவேன் என்று நம்பி அலையில்
    இதோ மூழ்கிறேன் நான்; வா, என்மேல் புரள்

7. அல்லேலூயா! இனி என் ஜீவகாலம்
    அவர் துதியிலே மகிழ் கொள்ளுவேன்
    அளவில்லா மீட்பாம் அன்பின் ஆழியை
    இயேசு திறந்தார் எல்லாருக்காகவும்!
                                               William Booth

2 comments: