Wednesday, December 28, 2011

பாடல் 66: ஆவியின் கனியைக் கொடுங்கள்

    இராகம்: ஆனந்தபைரவி தாளம்: ஆதி

    பல்லவி

    ஆவியின் கனியைக் கொடுங்கள் அதையே தேவன்
    ஆவலாய்த் தேடுகிறார் பாருங்கள்

    சரணங்கள்

1. பாவியே மாய்மால வேஷம் பண்ணுவது வெகுமோசம்
    சாவு நினையாமல் வரும், சாபமும் தொடர்ந்துவரும் - ஆவி

2. எட்டியின் கனிகட்கிணை இயற்றுங் கருமங்களைத்
    திட்டமுடனே துறந்து, திவ்விய செயல்புரிந்து - ஆவி

3. எத்தனை காலமாயுனில் ஏற்றக் கனி தேடும் வல்ல
    கர்த்தனேசுவின் தவணை கடந்தால் வரும் வேதனை - ஆவி

4. வெட்டவே கோடாரி  மரம் வேரிலிருந்து ஸ்திரம்
    கெட்ட கனி கொடுப்பவர் திட்டமாய் வெட்டப்படுவர் - ஆவி

5. அன்புடன், சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு,
    இன்ப நற்குணங்கள், சாந்தம், இச்சையடைக்கம், விஸ்வாசம் - ஆவி

No comments:

Post a Comment