Friday, December 30, 2011

பாடல் 21: பார்த்தேனே பரனை


    இராகம்: என்ன பாக்கியம்

    பல்லவி

    பார்த்தேனே பரனை - அவர் அன்பாய்
    ஏற்றாரே நரனை

    அனுபல்லவி

    உள்ளங்கால் துவங்கி உச்சந்தலை மட்டும்
    சொல்லமுடியாத இரணவாதைப்பட்ட நான்

    சரணங்கள்

1. கல்வாரிமலையில் - முண்முடியைச்
    சூண்டோராய்த் தலையில்
    கை கால் விலாவினில் திரு இரத்தம் பாய்ந்தோட
    வையகத்தோர்க்காக மாண்ட சுதனை! நான் - பார்த்தேனே

2. சீஷர்கள் கலங்க - நிலைமாறி
    பூதலம் குலுங்க
    நீசனைப்போல இந்த மாசற்ற நேசனார்
    கூசாமல் பாடுகள் பட்டு மரித்தாரே! - பார்த்தேனே

3. வாதைக்குள் ளானோர் - பேயின் தந்திரப்
    பாதைக்குள்ளானோர்
    பட வேண்டிய பாட்டைச் சடலந்தனி லன்பாய்
    பட்டுச் சிலுவையில் வெற்றி யடைந்தோனை! - பார்த்தேனே

4. ஓடுது இன்று - ஜீவ நதி
    பாவிகட்கென்று!
    பாவத்தை விட்டிப்போ தாவி இவர் பாதம்
    பாவி நீ வந்தால் உன் சாபங்கள் தீர்ந்திடும் - பார்த்தேனே

No comments:

Post a Comment