Wednesday, December 28, 2011

பாடல் 58: மகனே! உன் நெஞ்செனக்குத் தாராயோ


    இராகம்: கௌசிகை தாளம்: ஆதி

    பல்லவி

    மகனே! உன் நெஞ்செனக்குத் தாராயோ? மோட்ச
    வாழ்வைத் தருவேன் இது பாராயோ?

    சரணங்கள்

1. அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே - பாவ
    அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே - மகனே

2. உந்தன் ஆத்துமத்தை நீ படைப்பாயே - அதில்
    ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே - மகனே

3. பாவம் அனைத்துமே விட்டோடாயோ? நித்ய
    பரகதி வாழ்வை இன்றே தேடாயோ - மகனே

4. உன் பாவம் முற்றும் பரிகரிப்பேனே - அதை
    உண்மையாய் அகற்ற நான் மரித்தேனே - மகனே

No comments:

Post a Comment