Monday, December 26, 2011

பாடல் 80: வாழ்வை நம்பாதே


    பல்லவி

    வாழ்வை நம்பாதே - மனமே
    வாழ்வை நம்பாதே

    அனுபல்லவி

    தாழ்வில்லாத நமது சுவாமி
    தாழைத் தேடிப் பாவம் விடு

    சரணங்கள்

1. எத்தனை பேர் புவி ஆண்டார் - அவர்
    எல்லாவரும் முன்னே மாண்டார் - இங்கு
    செத்தவரில் எவர் மீண்டார்
    தேவசித்தம் ஒருவரும் தாண்டார் புவி - வாழ்வை

2. இன்று பல்லக்கினில் போவார் - நாளை
    எடுக்கும் ஆட்களும் ஆவார்  நரர்
    என்றவர் யாவரும் சாவார் - மதி
    யீனர் நரகத்தில் சேர்வார் - புவி - வாழ்வை

3. எண்ணிக்கை இல்லாமல் இங்கே - முன்னாள்
    இருந்த பேரெல்லாம் எங்கே? - நாளை
    எண்ணிப் பிழைப்போம் நாம் - இங்கே
    இயேசு நாயகனே நம் பங்கே - புவி - வாழ்வை

No comments:

Post a Comment