Friday, December 30, 2011

பாடல் 4: இருள் போன்ற நேரத்திலே


    Dark was the hour
       (Tune: 90 of ESB)

1. இருள் போன்ற நேரத்திலே
    ஓர் சத்தம் கேட்குது
    தேவ சுதன் தோட்டத்திலே 
    நொந்து ஜெபிப்பது

    பல்லவி

    கெத்சமனேயில்
    விம்மி அழுது
    ஜெபப்போரில் மீட்பர் வேர்வை
    இரத்தத்தைப்போல் விழுது

2. நேசமான உம் மகனே
    வாதைகுள்ளானாரே
    பிதாவே, உன் சித்தந்தானே
    ஆகட்டும் என்றாரே

3. எனக்காய் நீர் வேண்டுகிறீர்
    நானதைக் கேட்கிறேன்
    என் இயேசுவே! பாவி வாறேன்
    ஏற்றுகொள்ளு மென்னை
                    Samuel Wesley

No comments:

Post a Comment