Friday, December 23, 2011

பாடல் 98: எத்தனை திரள் என் பாவம்

    இராகம்: தன்யாசி தாளம்: ஆதி

    பல்லவி

    எத்தனை திரள் என் பாவம், என் தேவனே!
    எளியன் மேல் இரங்கையனே!

    அனுபல்லவி

    நித்தம் என் இருதயம் தீயதென் பரனே
    நிலைவரம் எனில் இல்லை; நீ என் தாபரமே!

    சரணங்கள்

1. பத்தம் உன்மேல் எனக்கில்லை என்பேனோ?
    பணிந்திடல் ஒழிவேனோ?
    சுத்தமுறுங் கரங் கால்கள் விலாவினில்
    தோன்றுது காயங்கள் தூய சிநேகா! - எத்தனை

2. எந்தன் அநீதிகள் என் கண்கள் முனமே
    இடைவிடா திருக்கையிலே!
    உந்தன் மிகுங்கிருபை ஓ! மிகவும் பெரிதே
    உத்தம மனமுடையோய்! எனை ஆளும் - எத்தனை

3. ஆயங் கொள்வோன் போல் பாவ ஸ்திரீபோல்
    அருகிலிருந்த கள்ளன் போல்
    நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்!
    நீ எனக்காகவே மரித்தனை பரனே! - எத்தனை

4. கெட்ட மகன்போல துட்டனாய் அலைந்தேன்
    கெடு பஞ்சத்தால் நலிந்தேன்
    இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அல நான்
    எனை இரட்சித்திடல் எந்தன் நிமித்தமே அப்பனே - எத்தனை
                                                                                         B.D

No comments:

Post a Comment