Wednesday, December 28, 2011

பாடல் 68: நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம்


    இராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி

1. நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம்
    பொய்யுலகை நம்ப வேண்டாம்;
    நேசங் காட்டித் துரோகஞ் செய்யும்
    பாழுலகை நம்ப வேண்டாம்

2. உன்னை பெற்ற மாதாவெங்கே?
    போஷித்த உன் தந்தையெங்கே?
    போய்விட்டாரோ போய்விட்டாரோ
    உன்னை விட்டுப் போய்விட்டாரோ?

3. திருடனைப் போல சாவு வரும்
    திடுக்கிடுவாய் நீயும் அப்போ;
    பாம்பின் வாயில் தவளை போலே
    பரிதபிப்பாய்! பரிதபிப்பாய்!

4. பிரேதமாகப் பாவி யுன்னை
    தூக்கிப் போவார் கல்லறைக்கு;
    அங்கே உன்னை வைத்திடுவார்
    நம்புவாயோ உலகைப் பின்னும்?

5. இயேசு நாதர் பாதந்தேடும்;
    மீட்பை இன்றே பெற்றுக்கொள்ளும்
    குருசில் தொங்கும் நேசர் பாரும்
    குணமாக்குவார் இப்போ வாரும்

No comments:

Post a Comment