Saturday, October 22, 2011

பாடல் 268: கர்த்தரோடு நாமும்


    When we walk with the Lord - 397
                  (Tune 586 of ESB)

1. கர்த்தரோடு நாமும்
    நித்தமும் நடந்தால்
    எத்தனை மகிமை அருள்வார்;
    நம்மில் வசிப்பாரே
    அவர் சித்தம் செய்து
    நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால்

    நம்பியே நாம் கீழ்ப்படிந்திடுவோம்
    இயேசுவில் மகிழ்ந்திட வேறு வழி இல்லை

2. நிழலோ மேகமோ
    திகிலோ பயமோ
    அவர் முன்னே அணுகிடாதே
    சந்தேகம் நீங்கிடும்
    கண்ணீரொழிந்திடும்
    நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் - நம்பியே

3. துக்கம் பாரமும் நாம்
    சகித்திடும் வேளை
    ஈவாரே பலன் நம் வேலைக்கு
    கண்ணீர் கவலையும்
    திண்ணம் மாற்றிடுவார்
    நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் - நம்பியே

4. பலிபீடத்தின் மேல்
    படைத்திடும் வரை
    அறிந்திடோம் நாம் அவரன்பை
    கிருபை மகிழ்ச்சி
    கிடைத்திடச் செய்வார்
    நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் - நம்பியே

5. அவர் பாதத்திலே,
    அமர்ந்திருப்போமே,
    அவரோடு வழி நடப்போம்;
    சொல்வதையே செய்வோம்,
    பயமின்றிச் செல்வோம்
    நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் - நம்பியே
                                                John Henry Sammis

No comments:

Post a Comment