Tuesday, October 18, 2011

பாடல் 296: பாவ சஞ்சலத்தை நீக்க


    What a Friend we have in Jesus - 645
                     (Tune 451 of ESB)

1. பாவ சஞ்சலத்தை நீக்க
    பிராண சிநேகித னுண்டே
    பாவப் பாரம் தீர்ந்து போக
    மீட்பர் பாதம் தஞ்சமே!
    சால துக்க துன்பத்தாலே,
    நெஞ்சம் நொந்து சோருங்கால்,
    துன்பம் இன்பமாக மாறும்
    ஊக்கமான ஜெபத்தால்!

2. கஷ்ட நஷ்ட முண்டானாலும்
    இயேசுவண்டை சேருவோம்;
    மோச நாசம் நேரிட்டாலும்
    ஜெபத்தால் சமீபிப்போம்;
    நோக்குவாரே நெஞ்சின் நோவை,
    பெலவீனம் தாங்குவார்;
    நீக்குவாரே மனச் சோர்வை,
    தீய குணம் மாற்றுவார்

3. பெலவீனமான போதும்
    கிருபாசனமுண்டே,
    இன ஜனம் சாகும்போதும்
    புகலிடம் இதுவே;
    ஒப்பில்லாத பிராண நேசா;
    உம்மை நம்பி நேசிப்போம்;
    அளவற்ற அருள் நாதா!
    உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்
                                           Joseph Scriven

No comments:

Post a Comment