Saturday, October 15, 2011

பாடல் 333: முன் செல்லு முன் செல்லு வீரா!


    இராகம்: காவடிசிந்து தாளம்: சாப்பு

    பல்லவி

    முன் செல்லு முன் செல்லு வீரா! - என்றும்
    இரட்சண்ய சேனையில் இரத்தம் தீயுடன்!

    கண்ணிகள்

1. இருளான பாதையில் வந்தால் - அவர்
    அருளினால் உன்னைப் பிடித்திழுப்பாரே!
    எதிரிகள் சுற்றி வந்தாலும் - நீ
    திகிலடையாமலே எதிர்த்து முன்செல்லு - முன்

2. மேகம்போல் துன்பம் வந்தாலும் - நீ
    வேகமாய் இயேசுவைப் பிடித்துக் கொள்ளலாம்;
    பாவத்தின் சோதனை வந்தால் - அவர்
    பாதத்தைப் பிடித்து ஜெயம் பெறலாமே - முன்

3. அழுகையும் துக்கம் வந்தாலும் - அவர்
    இருகரத்தா லுந்தன் கண்ணீரைத் துடைப்பார்;
    சிலுவையை இங்கே சுமந்தால் - உந்தன்
    சிரசிற்குப் பொன்முடி தரிப்பார் மோட்சத்தில் - முன்

No comments:

Post a Comment