Tuesday, October 18, 2011

பாடல் 297: இயேசு சுவாமி அருள் நாதா!


    Pass me not O loving Saviour - 301
                (Tune 341 of ESB)

1. இயேசு சுவாமி அருள் நாதா!
    கெஞ்சிக் கேட்கிறேன்;
    பாவி யெனைக் கைவிடாமல்
    சேர்த்துக் கொள்ளுமேன்!

    பல்லவி

    இயேசு சுவாமி!
    கெஞ்சிக் கேட்கிறேன்;
    பாவி யெனைக் கைவிடாமல்
    சேர்த்துக் கொள்ளுமேன்!

2. கெஞ்சினோர் அநேகர் பேரில்
    தயை காட்டினீர்
    எந்த நீசன் அண்டினாலும்
    தள்ளவே மாட்டீர்! - இயேசு

3. தீய குணம் கிரியை யாவும்
    முற்றும் வெறுத்தேன்;
    நீரே தஞ்சமென்று நம்பி
    வந்து நிற்கிறேன் - இயேசு

4. தூய ரத்தத்தாலே என்னை
    சுத்தமாக்குவீர்
    வல்ல ஆவியால் எந்நாளும்
    காத்து ஆளுவீர்! - இயேசு
                               Fanny Crosby

No comments:

Post a Comment