Wednesday, October 19, 2011

பாடல் 288: ஆவியில் ஜெபம் செய்ய


    பல்லவி

    ஆவியில் ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி!
    அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி!

    சரணங்கள்

1. தேவாவி அருள்மாரி எம்மேலனுப்ப
    தேவா ஜெயித்திட பெலன் வேண்டும் சுவாமி! - ஆவி

2. முழு உள்ளம் கரைத்து என் இதயத்திலிருந்து
    சுளுவாக வசனங்கள் சுரந்திடச் செய்யும் - ஆவி

3. வஞ்சக வசனத்தால் இருளடையாமல்
    நெஞ்சம் உம்மில் சார்ந்து அருள் பெறச் செய்யும் - ஆவி

4. பெலனற்ற ஏழைக்குப் பெலன் தாரும் சுவாமி,
    நலமாக நாவை நீர் மாற்றிடும் சுவாமி - ஆவி

5. ஜெபம் செய்ய வாயை நீர் தொட்டிடும் சுவாமி,
    ஜெயம் பெற வகை விதம் கற்பியும் சுவாமி - ஆவி

6. இயேசுவின் இரத்தத்தால் இதயத்தைக் கழுவி
    நேசரி னாவியா லொருமிக்கச் செய்யும் - ஆவி

No comments:

Post a Comment