Tuesday, October 18, 2011

பாடல் 299: கர்த்தா உம் அன்பின் சத்தத்தைக் கேட்டு


    I am Thine O Lord - 585
             (Tune 637 of ESB)

1. கர்த்தா உம் அன்பின் சத்தத்தைக் கேட்டு
    மீட்பைப் பெற்றுக் கொண்ட நான்,
    ஆவலாய் இதோ நம்பிக்கையோடு,
    கிட்டிச் சேர நான் வாறேன்

    பல்லவி

    எனதுள்ளம் உள்ளம் உள்ளத்தை இழும்
    நீர் மாண்ட குருசண்டை

2. மீட்பா! இரத்தத்தால் என் இருதயம்
    வெண்மையாகக் கழுவி
    முற்று முடிய உம்மைச் சேவிக்க
    மாற்றும் நீர் என் இச்சையை - எனதுள்ளம்

3. உம் சிங்காசனத்தின் முன்பிலே நான்
    என் நேரத்தை கழிப்பேன்
    முழங்கால் ஜெபம் செய்யும் போது நான்
    நண்பனைப்போல் பேசுகிறேன் - என்றென்றும் - எனதுள்ளம்

4. மண்ணில் கண்டிடா பேரின்பத்தை நான்
    விண்ணில் பெற்று வாழுவேன்!
    அண்ண லன்பின் ஆழமும் நீளமும்
    அங்கே கண்டானந்திப்பேன்! - எனதுள்ளம்
                                                    Fanny Crosby

No comments:

Post a Comment