Sunday, October 23, 2011

பாடல் 245: வாரும் நித்திய ஆவியே!


    Come Thou everlasting Spirit - 191
             (Tune 267 or 268 of ESB)

1. வாரும் நித்திய ஆவியே!
    தாரும் தவிப்பவர்க்கு;
    பாரில் இயேசு பாடால் வந்த
    பலன் யாவும் முற்றுமாய்

    பல்லவி

    நேசமுள்ள இயேசுவுக்காய்,
    தாசன் நானென் யாவையும்
    பாசமாய் இதோ படைத்து
    பற்றினேன் சிலுவையை

2. அவரடைந்த கஸ்தியும்
    அதால் வந்த ரட்சையும்
    அறிந்த நித்திய ஆவியே!
    எனக் கதைப் போதியும் - நேசமுள்ள

3. அவர் மரணக் காட்சியை
    நேரில் கண்ட சாட்சியே
    நீரே எனக்கு கிறிஸ்துவின்
    நேச ரூபம் காட்டிடும் - நேசமுள்ள

4. நாம் வதைத்திட்ட நாதனை
    எண்ணினால் மா வேதனை
    தாமீந்திட்ட மீட்பதனை
    தந்துதவும் ஆவியே! - நேசமுள்ள
                                       Charles Wesley

No comments:

Post a Comment