Sunday, October 16, 2011

பாடல் 328: பாவத்தால் நம் தேசத்தார்கள்


    So the front! The cry is ringing - 692
                   (Tune 384 of ESB)

1. பாவத்தால் நம் தேசத்தார்கள்
    அலைகிறார் மூர்க்கத்தால்
    போர் புரிய தேவை ஆட்கள்
    முன்னணியில் இடமுண்டு;
    லோக ஆசை வெறுத்து,
    தன்னயத்தை அன்பால் கொன்று
    பேய்ச் சிறை விடுவித்து
    இயேசுவின் நேசத்தைச் சொல்ல

    பல்லவி

    நாம் முன் சென்று பேயை வென்று
    ஒன்றாய்ப் போர் செய்வோம்;
    நம்பிக்கையால் மீட்பை மெய்யாய்
    பரப்புவோம்
    ஜெயம் எனக்கு
    மீட்பரின் திவ்ய ரத்தத்தாலே;
    ஜெயம் எனக்கு
    மீட்பர் ரத்தத்தால்!

2. முன்செல் யுத்தம் மா மும்முரம்,
    மீட்பர் பாதை காட்டுவார்
    மெய்யாக செய் உன்னைத் தத்தம்
    தேவன்பை ஊற்றுவார்;
    சிறைப்பட்டோர் கூக்குரல்
    நம்மை எழுப்பி விடுது;
    தேவாவியின் ஏவுதல்
    சந்தேகம் பயம் நீக்குது

3. முன்செல் நீ தாமதியாதே,
    கோழை நெஞ்சர் வீழ்கிறார்
    மாயக்காரர் சொல் கேட்காதே,
    மெய்யாய் ஊரார் மாள்கிறார்;
    சஞ்சலப்பட்டோர்களின்
    துக்க நெஞ்சை மீட்பர் தேற்ற
    பாவ அடிமைகளின்
    உள்ளத்தை ரட்சகர் மாற்ற
                                                         Herbert H Booth

No comments:

Post a Comment