Monday, October 17, 2011

பாடல் 308: அருள் ஏராளமாய் பெய்யும்


    There shall be showers of blessing - 637
                    (Tune 456 of ESB)

1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
    அன்பின் வாக்குத் தத்தமே
    ஆறுதல் தேறுதல் ஈவார்
    ஆண்டவர் மேலிருந்து

        அருள் ஏராளம்
        அருள் அவசியமே;
        க்ருபைத் துளிகள் போதாது
        மாரியாய்த் தந்தருளும்!
2. அருள் ஏராளமாய் பெய்யும்
    மீண்டும் உயிர்ப்பித்திடும்
    மேடு பள்ளங்களின் மேலும்
    கேள் மாமழையின் சத்தம்! - அருள்

3. அருள் ஏராளமாய் பெய்யும்
    எம்மேலனுப்பும் கர்த்தா!
    உம் வாக்கை எண்ணி நீர் எம்மை
    இப்போ உயிர்ப்பித்திடும் - அருள்

4. அருள் ஏராளமாய் பெய்யும்
    இன்றே பெய்திட்டால் நலம்;
    பாவ அறிக்கை செய்கிறோம்
    இயேசுவின் நாமத்திலே - அருள்

No comments:

Post a Comment