Saturday, October 22, 2011

பாடல் 260: என் மீட்பர் சென்ற பாதையில்


    Tune: I am clinging to the cross
                    (Tune 144 of ESB)

1. என் மீட்பர் சென்ற பாதையில்
    போக ஆயத்தமா?
    கொல்கொதா மலை வாதையில்
    பங்கைப் பெறுவாயா?

    பல்லவி

    சிலுவையை நான் விடேன்
    சிலுவையை நான் விடேன்

2. ஊரார் இனத்தார் மத்தியில்,
    துன்பம் சகிப்பாயா?
    மூர்க்கர் கோபிகள் நடுவில்,
    திடனாய் நிற்பாயா? - சிலுவையை

3. தாகத்தாலும் பசியாலும்
    தொய்ந்தாலும் நிற்பாயா?
    அவமானங்கள் வந்தாலும்
    சிலுவை சுமப்பாயா? - சிலுவையை

4. பாவாத் மாக்கள் குணப்பட
    நீ தத்தம் செய்வாயா?
    கோழை நெஞ்சர் திடப்பட
    மெய் யுத்தம் செய்வாயா? - சிலுவையை

5. லோகத்தார் மாண்டு போகிறார்!
    மெய் வீரர், இல்லாமல்
    பார்! மீட்பர் ஜீவனை விட்டார்
    தொங்கி சிலுவையில்! - சிலுவையை

6. வாழ்நாள் எல்லாம் நிலை நின்று
    சிலுவை சுமப்பேன்
    தேவ அருளினால் வென்று
    மேல் வீட்டைச் சேருவேன்! - சிலுவையை

No comments:

Post a Comment