Monday, October 17, 2011

பாடல் 314: ஆதியாம் மகா ராஜனே


    பல்லவி

    ஆதியாம் மகா ராஜனே - எந்த வேளையும்
    அடியனோடிரும் ஈசனே

    அனுபல்லவி
   
    தீதில்லா சருவேசா தேசுறும் பிரகாசா
    பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால் - ஆதியாம்

1. பாவி பெலனால் ஐயனே - நின்றால் என்னைப்
    பகைவர் ஜெயிப்பார் மெய்யனே;
    தேவா துணை நீர் ஐயனே - சிறியனிடம்
    சேர்ந்தே வசியும் துய்யனே
    மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும் காவலன் நீரே;
    சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும் - ஆதியாம்

2. இரக்கம் பொழிய வாருமே - கிருபையாக
    இறைவா என்னிடம் சேருமே;
    உருக்கம் நிறைந்த நீருமே - அனவரதம்
    உந்தன் அருளைத் தாருமே;
    செருக்காய் எம்மீ திகலோர் சேதம் செய்ய நினைக்கும்
    திருக்கை அகற்றி என்னில் தினமும் அருள் புரியும் - ஆதியாம்

3. எந்தன் மரண மட்டுமே - அருகில் நீரே
    இருந்தால் மகா இஷ்டமோ;
    எந்த அகிதர் கெட்டுமே - இமைப் பொழுதில்
    ஏகிப் போவார் திட்டமே;
    தந்தை சுதன் நீரல்லால் தஞ்சம் வேறாரும் இல்லை
    விந்தை மேவும் கதியில் மேம்னையுடன் வாழ்கவே - ஆதியாம்

No comments:

Post a Comment